திருக்குறள்

511.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.

திருக்குறள் 511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.

பொருள்:

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.

மு.வரததாசனார் உரை:

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.